செட்டிநாடு பலாக்காய் கறி(Chettinad palakkay curry )

Tuesday, March 21, 2017

சிந்தனை தெளிவடைய செய்யும் ஞான சின் முத்திரை


பலன்கள் :
இது தியானத்திற்கு ஏற்றது. சிந்தனை தெளிவு அடையும். நரம்பு மண்டலங்கள் நன்றாக செயல்படும். இரத்த அழுத்தம் சீர்ப்படும்.



செய்முறை :
இருகைகளையும் முழங்கால் மீது உள்ளங்கை மேல் நோக்கி இருக்குமாறு வைத்து கட்டைவிரல் ஆட்காட்டி விரல் நுனியைத் தொட்டவாறு லேசான அழுத்தம் தரவேண்டும்.
காலை, மாலை என 10 முதல் 15 நிமிடம் தினமும் செய்ய வேண்டும்.
இந்த முத்திரையை தரையில் அல்லது சேரில் அமர்ந்து கொண்டு செய்யலாம்.
1 மாதம் தொடர்ந்து இந்த முத்திரையை செய்து வந்தால் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.

செட்டிநாடு பலாக்காய் கறி(Chettinad palakkay curry )

பலா பிஞ்சு – 1/2 கிலோ,
வெங்காயம் – 1 கிலோ,
 தக்காளி – 3/4 கிலோ,
பச்சைமிளகாய் – 10,
கறிவேப்பிலை – சிறிது,
உப்பு – தேவையான அளவு,
மஞ்சள் தூள் – 2 டீஸ்பூன்,
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்,
தனியா தூள் – 2 டீஸ்பூன்,
நல்லெண்ணெய் – 200 மி.லி.,
இஞ்சி – 200 கிராம்,
பூண்டு – 130 கிராம்,
கொத்தமல்லித்தழை – சிறிது



மசாலா அரைக்க…
காய்ந்த மிளகாய், தனியா, பட்டை, கராம்பு, ஏலக்காய் – 20 கிராம்,
சோம்பு, ,மரத்திமுக்கு
 அன்னாசிப்பூ – 20 கிராம்,
முந்திரி – 100 கிராம்,
தேங்காய்த்துருவல் – 100 கிராம்,
மிளகு – 20 கிராம்,
கறிவேப்பிலை – சிறிது.
எப்படிச் செய்வது?
மசாலாவிற்கு…

கடாயில் எண்ணெயை ஊற்றி காய்ந்த மிளகாய், தனியா, மிளகு, பட்டை, கராம்பு, ஏலக்காய், சோம்பு, மரத்திமுக்கு, அன்னாசிப்பூ, முந்திரி, தேங்காய்த்துருவல், கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும். ஆறியதும் மிக்சியில் சிறிது தண்ணீர் விட்டு அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் வெந்நீரில், சிறிய துண்டுகளாக நறுக்கிய பலா பிஞ்சு, மஞ்சள் தூள், உப்பு போட்டு வைக்கவும். கடாயில் நல்லெண்ணெயை ஊற்றி சோம்பு தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
பின்பு இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து பச்சைவாசனை போகும்வரை வதக்கவும். இத்துடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்கி, அரைத்த மசாலாவை ஊற்றி மிதமான சூட்டில் கிளறவும். பின்பு அதில் பலா பிஞ்சு, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கிளறி சுருண்டு வந்ததும், கொத்தமல்லித் தழையை தூவி இறக்கி பரிமாறவும்.


ஸ்லிம்மாக்க உதவும் கொழுப்பு நிறைந்த உணவுகள்! (Slimmakka fat-rich foods can help!)

அதிக கொழுப்பு சத்து நிறைந்த உணவுகள் உடலில் சதை வளர்ச்சியை அதிகரிக்க செய்து அவலட்சணமான தோற்றத்தை உருவாக்கும் என்பது மட்டுமே நம்மில் பலருக்கு தெரியும்.
ஆனால் அதே கொழுப்பு உணவுகளைப் பயன்படுத்தி ஸ்லிம்மான தோற்றத்தை பேணவும் முடியும் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?
ஆம், கொழுப்பு உணவுகளில் உள்ள பல கொழுப்பமிலங்களால் பாதகமான விளைவுகள் ஏற்பட்ட போதிலும், நன்மை பயக்கக்கூடிய சில கொழுப்பமிலங்களும் இருக்கத்தான் செய்கின்றன.


அதன்படி பின்வருவனவற்றினை உட்கொள்ளுதல் மூலம் இடையை ஸ்லிம்மாக பேண முடியும்.
அவோகேடோ-avocado


இது ஒரு நிரம்பாத கொழுப்பமில உணவாக இருப்பதுடன், இதில் காணப்படும் ஒலீயிக் அமிலமானது அளவுக்கு மீறிய பசி தூண்டப்படலை கட்டுப்படுத்துகின்றது. தவிர உடலிலுள்ள அதிக கொழுப்புச் சத்தினை எரிக்க உதவும் புரதம் மற்றும் நார்ச்சத்து என்பன அதிக அளவில் காணப்படுகின்றது.

தேங்காய்-Coconuts

அதிக அளவில் நிரம்பிய கொழுப்பமில உணவாக காணப்படுவதுடன், லாரிக் அமிலத்தை அதிகளவில் உற்பத்தி செய்யக்கூடியது. இவ் அமிலமானது உடலில் கொலஸ்ட்ராலின் அளவினை கட்டுப்படுத்துவதுடன், அடி வயிறு பருத்தலையும் குறைக்கின்றது.


பாதாம் பருப்பு-Almond


இதற்கு இடை பருமனாவதை கட்டுப்படுத்தும் ஆற்றல் இருப்பதாக ஆய்வு ஒன்றின் முடிவில் தெரியவந்துள்ளது. அதாவது உடல் பருமனை தூண்டும் கொழுப்புக்களை உறுஞ்சுவதை தடுக்கும் கலவைகள் பாதாம் பருப்பிற்கு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யோகட்-Yoghurt

கிரேக்க நாட்டில் தயாரிக்கப்படும் யோகட் சிறந்தது என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. காரணம் உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதுடன் அதில் நிறைந்த கொழுப்பு காணப்படுவதனாலுமாகும்.
தவிர இதில் புரோபயாடிக் பக்டீரியாக்கள் நிறைந்து இருப்பதால் அவை அடி வயிற்று பருமனையும் தடுக்கின்றது.

கை விரல்களை அழகாக்கும் மசாஜ்

கை மற்றும் விரல்களுக்கு மசாஜ் செய்வதால் உடல் ரிலாக்ஸாக இருக்கும். அதிலும் விரல்களை அதிகம் பயன்படுத்தி வேலை செய்வோர் அதாவது டைப் செய்வோர்கள் கை மற்றும் விரல்களுக்கு மசாஜ் செய்வது மிகவும் நல்லது. நாள் முழுவதும் டைப் செய்து, செய்து விரல்கள் வலி எடுக்கும். அவர்கள் இந்த மசாஜை செய்து கொண்டால் வலி நீங்கி புத்துணர்ச்சி கிடைக்கும்.



முதலில் சிறிது எண்ணெயோ அல்லது லோஷனையோ கைகளில் தடவவும். பின் மெதுவாக அந்த எண்ணெயோ அல்லது லோஷனையோ தோலில் ஊடுருவு‌ம் வரை ந‌ன்கு மசா‌ஜ் செ‌ய்ய வே‌ண்டு‌ம். அதன் பிறகு வைட்டமின் ஈ உள்ள எண்ணெயை எடுத்து கை, விரல்களில் தடவி மசாஜ் செய்யவும். முக்கியமாக மணிக்கட்டு, உள்ளங்கை ஆகிய இடத்தில் நன்கு மசாஜ் செய்யவும்.
மசாஜ் செய்யும் போது ஒவ்வொரு விரல்களுக்கிடையேயும் பெருவிரலை மெதுவாக விட்டு விட்டு செய்ய வேண்டும். இப்படி அடிக்கடி செய்து வர உடல் ரிலாக்சாக இருக்கும். விரல்களில் இருக்கும் நரம்புகள் மணிக்கட்டுகளில் இணைவதால் மணிக்கட்டில் மசாஜ் செய்வது புத்துணர்ச்சியைத் தரும்.
மேலும் கை விர‌ல்க‌ள் அழகாக இரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்றா‌ல் அவ‌ற்று‌க்கு நெயில் பாலிஷ் அடி‌த்தா‌ல் மட்டும் போதாது இந்த மாதிரியான மசாஜை செய்து முறையாக‌ப் பராம‌ரி‌‌த்து வ‌ந்தா‌ல் தா‌ன் நக‌ங்களு‌ம் அழகாக‌வும், ஆரோக்கியமாகவும் இருக்கும்

இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம்

Cervical Cancer என்பது பெண்களை அதிக அளவில் தாக்கும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஆகும்.
இந்த புற்றுநோய் ஏற்படுவதற்கு, ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் (HumanPapilloma Virus) காரணம். இந்த வைரஸானது உறவின் மூலம் ஆணிடமிருந்து பெண்களுக்கு பரவுகிறது என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஆரம்பகட்டத்திலேயே இந்த வைரஸின் தாக்கம் பெண்களுக்கு தெரியவருவதில்லை. மாறாக, பெண்களின் உடலிலேயே தங்கியிருக்கும் இந்த வைரஸ், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் போது திசுக்களில் மாறுதல்களை ஏற்படுத்தி காலப்போக்கில் கர்ப்பப்பை வாய் புற்றுநோயை ஏற்படுத்தும்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளை வைத்து கர்ப்பப்பை வாய் புற்றுநோய் என்று தெரிந்துகொள்ளுங்கள்
அறிகுறிகள்
கர்ப்பப்பைக்கு செல்லும் இரத்த ஓட்டமானது தடைபடும் போது கால்களில் வலி, புண் மற்றும் வீக்கம் போன்றவை ஏற்படுகிறது. இதுவே முதல்நிலை அறிகுறியாகும்.
பெண்ணுறுப்பிலிருந்து அதிகமான திரவம் துர்நாற்றத்துடன் வெளிப்படுவது
பெண்களின் உடலில், திடீரென்று ஏற்படும் இரத்தபோக்கு கர்ப்பப்பை புற்றுநோய்கான மற்றொரு முக்கியமான அறிகுறியாகும். உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியமாகும்.
சிறுநீர் கழிக்கும்போது எரிச்சலும், வலியும் உண்டாகி அசௌகரியத்தினை ஏற்படுத்தும்.
பாலியல் ரீதியான உறவின் போது வலி ஏற்படும். இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.
தடுக்கும் முறைகள்
10 முதல் 11 வயதுள்ள பெண் குழந்தைகளுக்கு தடுப்பூசியினை கட்டாயம் போட வேண்டும். அப்படி போடாமல் தவறும் பட்சத்தில் 45 வயதிற்குள்ளாக போட்டு கொள்ளவேண்டும்.
கர்ப்பபையில் ஏற்படும் தொற்றுகள், வெள்ளைப் படுதல் போன்றவற்றினை அலட்சியப் படுத்தாமல் சிகிச்சையினை மேற்கொள்ளவேண்டும்

இன்றைய ராசி பலன்

தேதி: செவ்வாய்க்கிழமை, 21 மார்ச் 2017



மேஷம்
aries-mesham
தெய்வ பக்தியால் மனநிம்மதி கூடும். அன்னதானம் போன்ற நற் காரியங்களில் ஈடுபடுவீர்கள். நல்ல மனைவி அமைவாள். புனிதப் பயணங்களால் புண்ணியம் சேரும்.
ரிஷபம்
taurus-rishibum
மனைவி/கணவனின் மனம் அறிந்து செயல்பட்டால் கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்கலாம். எந்தச் செயலையும் அவசரமின்றி நிதானமாகச் செய்தால் வெற்றி நிச்சியம்.
மிதுனம்
gemini-mithunum
வாக்கு சாதுர்யத்தால் வருமானம் பெருகும். அரசால் ஆதாயம் உண்டு. புதிய தொழில்கள் தொடங்க சாதகமான சூழ்நிலை அமையும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
கடகம்

விரும்பிய காரியங்கள் விரும்பியபடி நடக்கும். விருந்தினர் வருகையால் மனம் மகிழும். மாணவர்களுக்குக் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். பயணம் சுகப்படும்.
சிம்மம்
leo-simmam
முனைப்புக் காட்டாத முயற்சிகள் வெற்றி பெறாது. தொழில் ஆர்வம் கூடினால்தான் ஆதாயத்தை எதிர்பார்க்கலாம். சிலருக்குத் தேவையற்ற  கவலைகள் எழும்.

கன்னி

பெற்றோர்களின் மூலமாக சகாயம் அடைவீர்கள். மணவாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும். அன்னையின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. தன்னம்பிக்கை இழக்காதீர்கள்.

துலாம்
libra-thulam
வியாபாரத்தில் ஏற்பட்ட அதிக வருமானத்தால் பொருளாதாரம் மேம்படும். கல்வியில் வெற்றிபெற கடின உழைப்புத் தேவை. இனிய பேச்சால் பெண்களைக் கவர்வர்.

விருச்சிகம்
scorpio-viruchagam
இன்று, உணவு விஷயத்தில் கூட திருப்தி இருக்காது. மனதில் நிம்மதியற்ற நிலை உருவாகும். கல்வியில் வெற்றி கிட்டாத நிலையில் மகிழ்ச்சி குறையும்.

தனுசு
sagittarius-thanusu
மணவாழ்க்கை மணக்கும். தனவரவால் மனத்திருப்தி ஏற்படும்.  ஆராய்ச்சியும், தேர்ச்சியும் ஏற்படும். பெரியோரால் நேசம் ஏற்படும். தொழில் வளம் பெருகும்.


மகரம்
capricorn-magaram
இடமாற்றம் ஏற்படலாம். நஷ்டங்களைந் தவிர்க்க வியாபாரத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. எதிலும் ஆராய்ந்து செயல்களில் இறங்கவேண்டிய நாள்.

கும்பம்
aquarius-kumbam
பெண்களால் தனலாபம் அடைவீர்கள். பிரிந்தவர் கூடிப் பேரின்பம் அடைவர். மாணவர்களுக்குக் கல்வியிலும், வியாபாரிகளுக்குத் தொழிலிலும் வெற்றி கிடைக்கும்.

மீனம்
pisces-meenam
வியாபார விரிவாக்கத் திட்டங்கள் முன்னேற்றம் தரும். அதன் காரணமாக தன வரவு கூடும். எடுத்த காரியங்கள் எல்லாம் கை கூடும். அரசாங்கத்தால் ஆதாயம் கிடைக்கும்.




அமெரிக்கா: 8 நாடுகளின் விமானப் பயணிகள் மின்னனு சாதனங்களை எடுத்துச் செல்ல தடை

5 மணி நேரங்களுக்கு முன்னர்


எட்டு மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்ரிக்க நாடுகளிலிருந்து வரும் விமானங்களில், விமானிகள் தங்களுடன் விமானத்திற்குள் எடுத்துச் செல்லும் பைகளில் மடிக்கணிணினி மற்றும் டேப்லட் போன்ற மின்னனு சாதனங்களை எடுத்துச் செல்வதற்கு அமெரிக்க அரசாங்கம் தடை விதித்துள்ளது.


இந்த நடவடிக்கை 10 விமான நிலையங்களில் இயங்கும் ஒன்பது விமான சேவைகளை பாதிக்கும் என அரசு வட்டாரங்கள்  தெரிவித்துள்ளன.
வெளிநாடுகளில் உளவுத் துறையால் சேகரிக்கப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டே இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன

இதில் மின்னனு சாதனங்களான மடிக்கணினி, டேப்லட்ஸ், கேமராக்கள், டிவிடி சாதனம் மற்றும் மின்னனு விளையாட்டு பொருட்கள் ஆகியவை அடங்கும் என செய்திகள் தெரிவிக்கின்றன.
இருப்பினும் அலைபேசிகள் மற்றும் ஸ்மார்ட்ஃபோன் அலைபேசிகள், தங்களுடன் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும்.
உள்நாட்டு பாதுகாப்பு துறை, இதுகுறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது; ஆனால் இன்று செவ்வாய்க்கிழமையன்று இதற்கான அறிவிப்பை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய தடை கடந்த சில வாரங்களாகவே பரிசீலனையில் இருந்ததாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன